ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ் பல்கலை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான(2015-16) பி.எட்., (இளங்கலை கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல் வினியோகிக்கப்படுகின்றன.
இரண்டாண்டு படிப்பான இதற்கு தொடக்கக் கல்வியில் நேரடி பயிற்சிபெற்று அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலை மாணவர் சேர்க்கை மையம், மதுரை அழகர்கோவில் ரோடு பல்கலை வளாக மாணவர் சேர்க்கை மையம் ஆகிய இடங்களில் வழங்கப்படும். மேலும் www.mkudde.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து உரிய கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்கள் 0452- 253 5973 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டுக்கொள்ளலாம் என தொலை நிலைக் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. விரைவில் அறிவிப்பு வெளியாகும்
    ஆனால் அந்த விரைவில் எப்போது என்பது தெரியவில்லை

    ReplyDelete
  2. விரைவில் அறிவிப்பு வெளியாகும்
    ஆனால் அந்த விரைவில் எப்போது என்பது தெரியவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி