இன்ஜி. கவுன்சிலிங் ஒரே நேரத்தில் 50 பேர் தேர்வு செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2015

இன்ஜி. கவுன்சிலிங் ஒரே நேரத்தில் 50 பேர் தேர்வு செய்யலாம்

கவுன்சிலிங் ஏற்பாடு குறித்து தமிழ்நாடுஇன்ஜி. மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள்இடங்களை தேர்வு செய்ததும் கல்லுாரிக்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்தில் முன்தொகை செலுத்த வேண்டும்.இதற்காக கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில் எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.கவுன்சிலிங் அரங்கில் 18 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. காலியிடங்கள் விவரத்தை அறிய மிகப்பெரிய மின்னணு
திரைகள் உள்ளன.மாணவர்கள் மூன்று வகை கல்லுாரிகள் மற்றும் விருப்ப பாடங்களை பதிவு செய்யலாம். இதற்காக50 பேர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய 50 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அண்ணாபல்கலையின் மாணவர் குழு இயக்கும். அவர்கள் கல்லுாரிகளை பற்றி மாணவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டார்கள்.

கவுன்சிலிங் அரங்கிற்குள் 150 ஊழியர்கள்; 50 பேராசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் கவுன்சிலிங் பணிகளில் ஈடுபடுவர். கவுன்சிலிங் குறித்து மாணவர்களுக்கு முன்னறிவிப்பு அறிவுரை கூட்டம் நடக்கும்.கவுன்சிலிங் தினமும் எட்டு பிரிவுகளாக நடக்கும்; ஒவ்வொரு பிரிவிலும் 500 - 800 பேர் வரைகல்லுாரியை தேர்வு செய்ய முடியும்.மாணவர்களுக்கான அழைப்பு கடிதத்தில் 'பார்கோட்' வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணினி பதிவுகளில் திருத்தம்தேவைப்பட்டால் மாணவர்கள் கவுன்சிலிங்குக்கு முன் திருத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி