ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கு: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கு: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல் ஆய்வக உதவியாளரை தேர்வு செய்வது எப்படி என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆய்வக உதவியாளர் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணன் தாக்கல் செய்த அந்த மனுவில்,
தமிழக பள்ளிகளில் காலியாகவுள்ள 4ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 30-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

8 லட்சம் பேர் வரை எழுதிய அந்த தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண், நேர்முக தேர்வுமதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணிக்கு தேர்வு நடைபெறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.எனவே, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. ஆய்வக உதவியாளர் தேர்வு எழுதிய 4 பேர், பணி நியமன தேர்வில் எழுத்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.​

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி