கரூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2015

கரூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

கரூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 15 முதல் 24 வரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் ச. ஜெயந்தி.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்துவது தொடர்பாகஅரசின் உத்தரவின் படி, கரூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 15-ல் புனித தெரசா தொடக்கப்பள்ளியிலும்,
16 ஆம் தேதி, தாந்தோணி ஊராட்சியில் உள்ள கவுண்டம்பாளையம் அரசுப்பள்ளியிலும், 17-ல் அரவக்குறிச்சி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியிலும், 20 ஆம் தேதி க. பரமத்தி அரசுப்பள்ளியிலும், 21-ல் லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 22-ஆம் தேதி தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23-ல் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கடைசி நாளான 24 ஆம் தேதி தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி