பிளஸ் 2வில் அதிக மார்க் அள்ள சிறப்பு புத்தகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2015

பிளஸ் 2வில் அதிக மார்க் அள்ள சிறப்பு புத்தகம்

அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,முக்கிய பாடங்களின், கேள்வி - பதில் அடங்கிய, 'பயிற்சி பெட்டகம்' என்ற, சிறப்புப் புத்தகம் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், அனைத்து பாடங்களுக்கும், தனித்தனியே பயிற்சி பெட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது.வல்லுனர் மற்றும் ஆசிரியர் குழுக்கள் இணைந்து, பல ஆண்டுகளின் கேள்வித் தாள் மற்றும் மாணவர்களின் திறனை ஆய்வு செய்து, இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான வினா மற்றும் விடைகள்; தேர்வுக்கு வரும் முக்கிய பாடப்பகுதி; பாடங்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள்; எந்த கேள்விகளை படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்; எந்தப் பகுதியைப் படித்தால், பாடங்களின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம் போன்ற விவரங்கள் இந்த புத்தகத்தில் இருக்கும்.இந்த புத்தகங்கள், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் வழங்கப்படும். மாணவர்கள்நகல் எடுத்துக் கொள்ளலாம்; விற்பனைக்கு கிடையாது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments:

  1. இது போன்று பயிற்சி பெட்டகங்களைத் தந்து அவர்களைத் தேர்ச்சியடையச்செய்வது,நல்லதல்ல.வினாக்கள் இதிலிருந்து மட்டுமே கேட்கப்படுவதால் ,மாணவர்கள்,இதனை மட்டுமே மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். உயர்கல்வி நுழைவிதேர்வில் வெற்றிபெறமுடியாமல் தவிக்கின்றார்கள். உயர் அதிகரிகளோ தேர்ச்சிவிகிதம் அதிகரித்துவிட்டடாகப் புள்ளி விவரங்களைக் காட்டி ஏமாற்றுகிரார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி