பிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்தி:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்பஅட்டை எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று வர வேண்டும்.
ஏற்கெனவே, பள்ளியில் 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையெனில், வேலைவாய்ப்பு அலுவலகத்தைஅணுகி பெற்றுக்கொள்ளலாம்.வரும் 15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளான 15-ஆம் தேதியை பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.மேலும், வேலைவாய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய விரும்பும்அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்பஅட்டை எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று வர வேண்டும்.
ஏற்கெனவே, பள்ளியில் 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையெனில், வேலைவாய்ப்பு அலுவலகத்தைஅணுகி பெற்றுக்கொள்ளலாம்.வரும் 15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளான 15-ஆம் தேதியை பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.மேலும், வேலைவாய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய விரும்பும்அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி