பி.இ., இரண்டாம் ஆண்டு கவுன்சிலிங் எலக்ட்ரிகல் பிரிவுக்கு நாளை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2015

பி.இ., இரண்டாம் ஆண்டு கவுன்சிலிங் எலக்ட்ரிகல் பிரிவுக்கு நாளை தொடக்கம்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங், எலக்ட்ரிகல் பிரிவுக்கு நாளை முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது.



டிப்ளமோ, பி.எஸ்சி., படித்தவர்கள், இன்ஜினியரிங்கில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங்,காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் கடந்த ஜூன்26ல் தொடங்கியது. பொது பிரிவான சிவிலுக்கு 27-ம் தேதி தொடங்கியது. 4,200 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 3580 பேர் மட்டுமே பங்கேற்று, சேர்க்கை ஆணை பெற்றனர். மெக்கானிக்கல் பிரிவில் 7,200 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இன்று மாலையுடன் கவுன்சிலிங் முடிவடைகிறது.எலக்ட்ரிகல் பிரிவுக்கு 7,700 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கவுன்சிலிங் நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகளிலிருந்து, இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், எலக்ட்ரிகல் பிரிவுக்கு அதிகபட்சமாக 66 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி