மாணவர்களுக்கு சைக்கிள்தாமதமின்றி வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2015

மாணவர்களுக்கு சைக்கிள்தாமதமின்றி வழங்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை, தாமதமின்றி வழங்கும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், காலணிகள், சைக்கிள், 'லேப் - டாப்' வண்ணப்பென்சில் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.


இதில், பிளஸ் 2 முடித்தபின், மாணவ, மாணவியருக்கு லேப் - டாப் வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்.இந்த ஆண்டு, இலவச சைக்கிள்களை தயாரித்து வழங்கும் தனியார் நிறுவனம், முன்கூட்டியே செயல்பட்டு, பள்ளிகள் திறக்கும் முன் சைக்கிள்களை மாவட்டங்களுக்கு அனுப்பியது. அதனால், இந்த சைக்கிள்கள் பல இடங்களில், மழை, வெயிலால் துருப்பிடித்து வீணாகும் சூழல்ஏற்பட்டது.

இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, சில நாட்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.இதையடுத்து, 'அனைத்து தகுதியான பள்ளிகளும், தங்கள் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை தாமதமின்றி வழங்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி