கலை, அறிவியல் கல்லூரிகளில் 30 சதவீதம் கூடுதல் 'அட்மிஷன்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

கலை, அறிவியல் கல்லூரிகளில் 30 சதவீதம் கூடுதல் 'அட்மிஷன்'

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 30 சதவீத அளவுக்கு, கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க, பல்கலை கழகங்கள் அனுமதி வழங்கி உள்ளன.தமிழகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


ஆங்காங்கே காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் மட்டுமே, தற்போது மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்று, பின், உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி ஆன, மாணவர்களைச் சேர்ப்பதும், சில கல்லுாரிகளில் நடந்து வருகிறது. இருப்பினும், கல்லுாரி கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைகள் அனுமதித்த இடங்களுக்கான சேர்க்கை, பல கல்லுாரிகளில் முடிந்து விட்டதால், கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முடியாத நிலை உள்ளது.


அதனால், கலை, அறிவியல் கல்லுாரிகளில், கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என, அனைத்து பல்கலை கழகங்களுக்கும், கல்லுாரி கல்வி இயக்ககம் கடிதம் அனுப்பியது. இந்தக் கடிதத்தை பரிசீலித்த பல்கலை கழகங்கள், ஒவ்வொரு கல்லுாரியின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு ஏற்ற, 30 சதவீத அளவுக்கு கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளன. ஆனாலும், 'வரும், 31ம் தேதிக்குள், மாணவர் சேர்க்கையை முடித்து, 200 வேலை நாட்களை உறுதி செய்ய வேண்டும்' என, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி