5-ம் தேதி எஸ்எஸ்எல்சி அசல் மதிப்பெண் சான்றிதழ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2015

5-ம் தேதி எஸ்எஸ்எல்சி அசல் மதிப்பெண் சான்றிதழ்

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 5-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பள்ளிகள் மூலம் கடந்த மே 29-ம் தேதி வழங்கப் பட்டது.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை செல்லத்தக்கது ஆகும். இருப்பினும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வெழுதிய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றி தழை அவர்கள் தேர்வெழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி