பள்ளிகளில் தொடர் திருட்டு: இரவு நேர காவலர்களை நியமிக்க ஆசிரியர்கள் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2015

பள்ளிகளில் தொடர் திருட்டு: இரவு நேர காவலர்களை நியமிக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்

அரசு பள்ளிகளில் மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடுபோவதால் பள்ளிகளில் இரவுநேர காவலர்களை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யப்ப நாயக்கன்பட்டியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் 65 விலையில்லா மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த அறையை தலைமை ஆசிரியர் உமா திங்கள்கிழமைதிறந்து பார்த்தபோது அறையின் ஜன்னல் கதவை உடைத்து அதிலிருந்த 10 மடிக்கணினிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தலைமைஆசிரியர் காடுபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கச் செயலர் நவநீதகிருஷ்ணன் கூறியது:மதுரை, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் உள்ள 54 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இரவு நேர காவலர்கள் 8 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, பிற பள்ளிகளில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. தேனி மாவட்டம் உத்தபுரம், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி ஆகிய பள்ளிகளில் ஏற்கெனவே கணினிகள் திருடப்பட்டுள்ளன. தற்போது அய்யப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியிலும் மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன.எனவே அனைத்து பள்ளிகளிலும் இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி