பாரம்பரியமான ஆசிரியர் சார்ந்த கல்வி முறை என்ற நிலை மாறி, மாணவர் சார்ந்த கல்வி முறை இப்போது பிரபலமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவிருப்பப் பாடத்தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.) பல கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.அதாவது ஒரு படிப்பின் அடிப்படைப் பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் (எலக்டிவ் பாடங்கள்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிப்பதுதான் சி.பி.சி.எஸ். முறை.பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் பெரும்பாலான கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்திலோ அதன்கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளிலோ இந்த நடைமுறைஅறிமுகம் செய்யப்படவில்லை.இந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில உயர்கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.சி.எஸ். முறை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து இந்த நடைமுறையை பொறியியல் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. பல்கலைக்கழக கல்விக்குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளில் முதல்முறையாக இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 2015-16 கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் இரண்டு விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமான ஆசிரியர் சார்ந்த கல்வி முறை என்ற நிலை மாறி, மாணவர் சார்ந்த கல்வி முறை இப்போது பிரபலமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவிருப்பப் பாடத்தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.) பல கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.அதாவது ஒரு படிப்பின் அடிப்படைப் பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் (எலக்டிவ் பாடங்கள்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிப்பதுதான் சி.பி.சி.எஸ். முறை.பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் பெரும்பாலான கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்திலோ அதன்கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளிலோ இந்த நடைமுறைஅறிமுகம் செய்யப்படவில்லை.இந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில உயர்கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.சி.எஸ். முறை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து இந்த நடைமுறையை பொறியியல் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. பல்கலைக்கழக கல்விக்குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளில் முதல்முறையாக இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரியமான ஆசிரியர் சார்ந்த கல்வி முறை என்ற நிலை மாறி, மாணவர் சார்ந்த கல்வி முறை இப்போது பிரபலமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவிருப்பப் பாடத்தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.) பல கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.அதாவது ஒரு படிப்பின் அடிப்படைப் பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் (எலக்டிவ் பாடங்கள்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிப்பதுதான் சி.பி.சி.எஸ். முறை.பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் பெரும்பாலான கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்திலோ அதன்கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளிலோ இந்த நடைமுறைஅறிமுகம் செய்யப்படவில்லை.இந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில உயர்கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.சி.எஸ். முறை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து இந்த நடைமுறையை பொறியியல் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. பல்கலைக்கழக கல்விக்குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளில் முதல்முறையாக இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி