மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வுக்கு (CTET) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2015

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வுக்கு (CTET) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan), நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti) மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சேருவதற்கான தகுதி தேர்வு Central Teacher Eligibility Test (CTET) 20.09.2015 அன்று நடத்தப்பட உள்ளது.


மத்திய பாடத்திட்ட அமைப்பான Central Board of Secondary Education இத்தேர்வை நடத்துகிறது.மத்திய அரசு பள்ளிகளில் தவிர சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் CTET தேர்வு பொருந்தும்.

* CTET தேர்வு 2 தாள்களை கொண்டதாகும்.தாள் - 1இல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.தாள் - IIஇல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு போன்ற இரு பிரிவுகளிலும் பணிபுரிய விரும்புபவர்கள் இருபகுதி தேர்வு தாள்களிலும் (தாள் I மற்றும் தாள் II) தகுதி பெற்றிருக்க வேண்டும்.

CTET தேர்வில் கலந்து கொள்வதற்கான குறைந்தபட்ச தகுதி பற்றிய விபரங்கள்:1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை பிரிவிற்கான ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Elementary Education பிரிவில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பைமுடித்திருக்க வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 4வருட Bachelor of Elementary Education படிப்பை (B.EI.Ed) முடித்திருக்க வேண்டும்அல்லது குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் சிறப்பு கல்வியியல் பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.அல்லது பட்டப்படிப்புடன் Elementary Education பிரிவில் இரண்டு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான Elementary பிரிவு ஆசிரியர்களுக்கான தகுதி பற்றிய விவரங்கள்:பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Elementary Education பிரிவில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து அத்துடன் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.அல்லது NCTE விதிப்படி குறைட்பட்சம் 45 சதவிகித மதிப்பெண்களுடன் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 4 வருட Bachelor in Elementary Education (B.EI.Ed.) முடித்திருக்க வேண்டும்.அல்லது குறைந்டபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 4 வருட பி.ஏ., பி.எஸ்சி., பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் சிறப்பு கல்வியியல் பிரிவில் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு குறைந்டபட்ச மதிப்பெண்களில் 5 சதவிகிதம் தளர்வு அளிக்கப்படும்.

* கல்வியியல் பிரிவில் இளநிலை அல்லது டிப்ளமோ பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களும்CTET விண்ணப்பிக்கலாம். அவர்களுது கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்ற பின்னரேCTET தகுதி சான்றிதழ் செல்லுபடியாகும்.

தேர்வு கட்டணம்:

தாள் - I அல்லது தாள் - II என்ற ஏதாவதொரு தேர்விற்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.தாள் - I மற்றும் தாள் - II என்ற இரு தேர்வுகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500.தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழி டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லதுசெல்லானை பயன்படுத்தி Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயருக்கு CBSE கணக்கிற்கு Syndicate Bank HDFC வங்கியில் செலுத்த வேண்டும்.தேர்வு நடைபெறும் தேதி:தாள் - II: 20.09.2015 அன்று காலை 9.30 முதல் நண்பகல் 12 மணி வரை.தாள் - I: 20.09.2015 பிற்பகல் 2 முதல் 4.30 மணி வரை.இரு தேர்வுகளும் தலா 2.30 மணி நேரம் நடைபெறும்.விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.08.2015

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 20.08.2015

தேர்வுக்கான அனுமதி கடிதத்தை 04.09.2015 முதல் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி