மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வுபெற்ற இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2015

மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வுபெற்ற இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு.


புதுக்கோட்டை திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இலுப்பூா் அருகே உள்ள இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் இரண்டு பிரிவுகளாக பங்கேற்று வெற்றி பெற்றனா்.
மறுநாள் சனிக்கிழமை புதுக்கோட்டையில் அதே பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவா் முத்துப்பாண்டி செய்திருந்த படைப்பான செயற்கைக்கோள் படைப்பு முதலிடத்தினை பிடித்து மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு பெற்றது. அதனைத்தொடா்ந்து மாலையில் புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக்கல்வி அலுவலா்கள்(பொ) புதுக்கோட்டை ப.மாணிக்கம், அறந்தாங்கி ஆா்.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி கலந்துகொண்டு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு  தோ்வு பெற்ற படைப்பினை படைத்த முத்துப்பாண்டியை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழை  வழங்கி பாராட்டினார். அதனைத்தொடர்ந்து இன்று 7ந்தேதி(திங்கட்கிழமை) காலை இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை இறைவணக்கக்கூட்டத்தில் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு பெற்ற செயற்கைக்கோள் படைப்பினை படைத்த மாணவா் முத்துப்பாண்டி மற்றும் கல்வி மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் தோ்வு பெற்ற படைப்பினை படைத்த மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் சி.பழனிவேலு பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் மாணவா்கள் சிறந்த படைப்புகளை படைக்க வழிகாட்டியாக செயல்பட்ட வழிகாட்டி ஆசிரியை ஆா்.சாந்தியை பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் உதவித்தலைமையாசிரியா்கள் ஆசிரிய. ஆசிரியைகள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
படவிளக்கம் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வுபெற்ற இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவா் முத்துப்பாண்டியை பாராட்டி புதுக்கோட்டை திருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கியபோது எடுத்தபடம். அருகில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலா் (பொ) ப.மாணிக்கம் மற்றும் பலா் உள்ளனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி