ஏழை பள்ளி குழந்தைகளுக்கு இலவச பால்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2015

ஏழை பள்ளி குழந்தைகளுக்கு இலவச பால்!

பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு, இலவச பால் அளிக்கும் திட்டத்துக்கு உதவுமாறு, தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து,என்.டி.டி.பி.,எனப்படும்,தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரிய தலைவர் நந்தகுமார், டில்லியில், நேற்று கூறியதாவது:


பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பால் வழங்க,என்.டி.டி.பி.,ஊட்டச்சத்து அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு,பால் கூட்டுறவு சங்கங்களுடன்,ஒருங்கிணைந்து செயல்படும்.


இதன் மூலம்,கார்ப்பரேட் நிறுவனங்கள்,சி.எஸ்.ஆர்.,எனப்படும்,கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ்,ஏழை குழந்தைகளுக்கு பால் வழங்கலாம். நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு,முக்கியத்துவம் அளிக்கப்படும்.


இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி