இந்திய புள்ளியியல் பணி தேர்வில் அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி மாணவர் சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2015

இந்திய புள்ளியியல் பணி தேர்வில் அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி மாணவர் சாதனை

மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய புள்ளியியல் பணித்தேர்வில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழக புள்ளியியல் துறை முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் கி.சந்திரசேகர் இந்திய புள்ளியியல் பணித்தேர்வில் அகில இந்திய அளவில் 24-வது தரவரிசையிலும், தமிழக அளவில் முதல் இடத்திலும் பொதுப்பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை தமிழகத்தை சேர்ந்த மாணவர் பெற்றுள்ளார். இவர் பல்கலைக்கழக புள்ளியியல் துறைத் தலைவர் பேராசிரியர் இரா.கண்ணனின் ஆய்வு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி