வேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணம் என பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2015

வேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணம் என பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம்

'வேலையில்லா திண்டாட்டத்துக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தான் காரணம்' என, சத்தீஸ்கர் மாநில, பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ., கட்சி யின், ரமண் சிங்தலைமையிலான ஆட்சி நடக்கிறது.


இம்மாநில கல்வி துறை வழங்கியிருக்கும், 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், வேலைக்கு செல்லும் பெண்களால்தான், வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக சித்தரித்திருப்பதாக, சவும்யா கர்க் என்ற ஆசிரியை, மாநில பள்ளி கல்வி துறை மற்றும் மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறார்.


அவர் அளித்த புகாரில், 'இத்தகைய தகவலால், மாணவர்களிடம், பெண்கள் என்றாலே வீட்டு வேலை செய்வதற்கும், தங்களை கவனிப்பதற்கும் தான் என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்' என கூறியுள்ளார். இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி