TNPSC: பொறியியல் பணித் தேர்வு: நேர்காணல் அக். 27-இல் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

TNPSC: பொறியியல் பணித் தேர்வு: நேர்காணல் அக். 27-இல் தொடக்கம்

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான 100 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-இல் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் 31,653 பேர் கலந்து கொண்டனர். இதில்விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணலுக்கு 219 பேர் தாற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி