ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'தமிழகத்தில் வங்கி பணிகள் ஸ்தம்பிக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2015

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'தமிழகத்தில் வங்கி பணிகள் ஸ்தம்பிக்கும்

ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை கண்டித்து, தமிழகத்தில், 1,100 பேர் உட்பட, நாடு முழுவதும், 17 ஆயிரம் ஊழியர்கள், இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தெரிவித்ததாவது:


ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால், எதிர்காலத்தில், ரிசர்வ் வங்கியே இருக்காதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுபோல், ரிசர்வ் வங்கியின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படுவதே இல்லை.இந்த காரணங்களுக்காக,நாடு முழுவதும், 17 ஆயிரம் ரிசர்வ் வங்கி ஊழியர்கள், இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்; தமிழகத்தில், 1,100 ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.காசோலைகளை ரிசர்வ் வங்கி தான், 'கிளியரிங்' செய்ய வேண்டும். அப்பணி இன்று நடைபெறாது என்பதால், தமிழக அரசு துறைகள் மற்றும் தனியாரின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் பாதிக்கும். நாங்கள் ஒப்புதல் அளித்தால் தான், உரிய வங்கி கணக்குக்கு பணம், 'ஆன்லைனில்' பரிமாற்றம் செய்யப்படும்; அதனால், அச்சேவையும் பாதிக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி