உதவிப் பொறியாளர் பணிக்கு வரும் 11-ல் நேர்காணல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2016

உதவிப் பொறியாளர் பணிக்கு வரும் 11-ல் நேர்காணல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

உதவிப் பொறியாளர் (சிவில்) தேர்வுக்கான நேர்காணல் வரும் 11-ல் தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:உதவிப் பொறியாளர் (சிவில்) பிரிவில் 213 இடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பரில் தேர்வு நடத்தப்பட்டது.


இதில் தேர்வு பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பிரிவில் 24 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இப்போது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு வரும் 27 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி