அவரையும், போலி சான்றிதழ் சப்ளை செய்த கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், வேலுார்மாவட்டம், கந்திலி ஒன்றியம் செவ்வாத்துார் புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியராக சேர்ந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், புதுப்பேட்டையை சேர்ந்த அருள் சுந்தரம் என்பவர், வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி முதல்,ஆசிரியர் அருள் சுந்தரம் பணிக்கு வராததால், அவர் மீது சந்தேகம் அடைந்து அவரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் அவர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தொடக்க கல்வித்துறை விசாரணை நடத்தியதில், போலி சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: 2001ம் ஆண்டு முதல் 2004 வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு உடனடியாக ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், போலி இருப்பிட சான்றிதழ்கொடுத்து, போலி படிப்பு சான்றிதழ் கொடுத்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆசிரியராகியுள்ளனர்.
அவரையும், போலி சான்றிதழ் சப்ளை செய்த கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், வேலுார்மாவட்டம், கந்திலி ஒன்றியம் செவ்வாத்துார் புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியராக சேர்ந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், புதுப்பேட்டையை சேர்ந்த அருள் சுந்தரம் என்பவர், வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி முதல்,ஆசிரியர் அருள் சுந்தரம் பணிக்கு வராததால், அவர் மீது சந்தேகம் அடைந்து அவரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் அவர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தொடக்க கல்வித்துறை விசாரணை நடத்தியதில், போலி சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: 2001ம் ஆண்டு முதல் 2004 வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு உடனடியாக ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், போலி இருப்பிட சான்றிதழ்கொடுத்து, போலி படிப்பு சான்றிதழ் கொடுத்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆசிரியராகியுள்ளனர்.
muraiyaga padithavargal veettil sethu kidakkirargal padikkathavargalukku poli certificate koduthu velai kodathavarkalai ethanaal adippathu ,..
ReplyDelete