மகளிர் தின கவிதை...( திரு _இரா. சக்திவேல் ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2019

மகளிர் தின கவிதை...( திரு _இரா. சக்திவேல் )

நியாயம் தானா....?
பெண்ணை மலர்
என்றான் கவிஞன் _ கவிதையில்
பெண்ணை சக்தி 
என்றான் பக்தன் _ வழிபாட்டில்
பெண்ணை அழகு 
என்றான் ஓவியன் _ சித்திரத்தில்
பெண்ணை மான்
என்றான் புலவன் _ காவியத்தில்
பெண்ணை பவித்திரம் 
என்றான் புனிதன் _ சரித்திரத்தில்
பெண்ணை நதி 
என்றான் நாடோடி _ பயணத்தில்
பெண்ணை அன்னை
என்றான் மகன் _ இல்லத்தில்
பெண்ணை தேவதை
என்றான் காதலன் _  காதலில்
பெண்ணை மனைவி
என்றான் கணவன்_ குடும்பத்தில்
ஆனால் ஏனோ மனிதன்....
பெண்ணை பெண் 
என்று கூறவில்லை _  சமூகத்தில்...

_இரா. சக்திவேல்,
மதுரை
Cell: 9842033504

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி