சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டுபடிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2019

சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டுபடிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்


சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப்படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதல் 5 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அங்கமான சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி,பிகாம் எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, ஆகிய 5 ஆண்டு கால ஹானர்ஸ் சட்டப்படிப்புகளில் சேர 3,191 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,747 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுதரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.தமிழக சட்டத்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான சி.வி.சண்முகம், தரவரிசை பட்டியலில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டத்துறைச் செயலர் எஸ்.எஸ்.பூவலிங்கம், சட்டக் கல்வி இயக்குநர்என்.எஸ்.சந்தோஷ்குமார், சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.சூர்யநாராயண சாஸ்திரி, பதிவாளர் (பொறுப்பு) ஆர்.விஜயலட்சுமி, தமிழ்நாடு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் டி.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 comment:

  1. Second year Pg or bed waiting for results candidates call to me sir 9600640918

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி