அரசுப்பள்ளி ஆசிரியருக்கு உழைப்பின் சிகரம் விருது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2019

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு உழைப்பின் சிகரம் விருது!


இன்று ஜூன் 16, 2019 அன்று மதுரையில் மகளிர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பல்வேறு சமூக சேவை புரிந்தோருக்கான உழைப்பின் விருது வழங்கும் விழாவில் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி திருமிகு ஆர். ஶ்ரீதரன் அவர்கள் தலைமையிலும் சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் திருமிகு எஸ்.எம்.முருகேசன், கவிஞர் கவிச்செல்வா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் பேரிடரில் பேருதவிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் M3 என்றழைக்கப்படும் மகிழ்வித்து மகிழ் இயக்கம் தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமான முனைவர் மணி கணேசன் என்பாருக்கு உழைப்பின் சிகரம் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

 நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை மகளிர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்க நிறுவனர் முனைவர் பாக்யலெட்சுமி மற்றும் பேராசிரியர் பால்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர். தந்தையர் தினத்தில் பெற்ற உழைப்பின் மேன்மையை உணர்த்தும் இவ்விருதினை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தந்தையருக்கு அர்ப்பணிப்பதாக விருதாளர் முனைவர் மணி கணேசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி