போட்டி தேர்வு மூலம் 353 மருந்தாளுநர்கள் நியமிக்க அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2019

போட்டி தேர்வு மூலம் 353 மருந்தாளுநர்கள் நியமிக்க அரசு முடிவு


மருந்தாளுநர்களை இந்த ஒரு முறை மட்டும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்ய, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத் துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித் துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்து வமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசு நேரடி நியமனம் மூலம் 353 மருந்தாளுநர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இதற்கான அறி விக்கையை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வுவாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இதையடுத்து, 23 ஆயிரத்து 8 பேர் பேர் ஆன்லைனியில் விண்ணப்பித் திருந்தனர்.

அரசுக்கு கருத்துரு இவர்களில் பார்மஸி பட்டப் படிப்பு மற்றும் பார்மஸி டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு தனித் தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இரு படிப்புகளுக்கும் மதிப்பெண் முறை மாறுபடுவதால், சிக்கல் ஏற்பட்டது. எனவே, போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்வதற்கு, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம், அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இந்த கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, இந்த ஒருமுறை மட்டும் மருந்தாளுநர்களை போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

2 comments:

  1. Case Judgment innum varla..adhukulla epdi Exam nu potrukinga

    ReplyDelete
  2. இதுலயும் கண்டமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி