தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நடப்புகல்வி ஆண்டில் சேர 3,800 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு கால அட்டவணை www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை பதிவுசெய்தால் தங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணையும் கலந்தாய்வு நாள் மற்றும் நேரத் தையும் தெரிந்து கொள்ளலாம்.விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிகேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவனத்தில் நாளை (ஆக.7) முதல்13-ம் தேதி வரை (12-ம் தேதி நீங்கலாக) நடை பெறுகிறது.
கலந்தாய்வு நாள், விவரம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தபால் மூலமாக வும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளரும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவனத்தின் முதல்வரு மான பேராசிரியை எம்.எஸ்.தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி