உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களின் பட்டியலை அக்டோபர் 26-ம் தேதிக்குள் சம்பர்பிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்களை நியமிப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.அதில், உள்ளாட்சி தேர்தலை திறம்பட நடத்தி முடித்திட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனத்திற்கு உரிய நபர்களின் விவரங்களை வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உண்மையாவா சொல்றீங்க இதையேதான் எத்தனை நாளைக்கு சொல்லுவீங்க
ReplyDeleteஉண்மையாவா சொல்றீங்க இதையேதான் எத்தனை நாளைக்கு சொல்லுவீங்க
ReplyDelete