RTE- TET நிபந்தனையில் 1500 ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சியே தீர்வு - TASTA வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2019

RTE- TET நிபந்தனையில் 1500 ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சியே தீர்வு - TASTA வேண்டுகோள்

RTE பற்றிய புரிதல் இல்லாமல் நியமிக்கப்பட்ட 1500 ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வில் வந்த சுமார் 1000 ஆசிரியர்களுக்கும்  காலாண்டு விடுமுறையில் TET புத்தாக்கப்பயிற்சி தர வேண்டும் என TASTA வேண்டுகோள் விடுக்கிறது.

"RTE Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது.

தமிழகத்தில் RTE அமலாக்கம்  அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , அரசு பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை என்று கூறப்படுகிறது.
இதுவே முதல் முரண்பாடு.

23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிந்தல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்த அனைத்து அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1500  ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க,

கடந்த 2018 வரை RTE பற்றி தெரிந்தும் ஆசிரியர் அல்லாத ( Non - Teaching ) பணியில் சேர்ந்தவர்களுக்கு TET இல்லாமலேயே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக  பதவி உயர்வு தந்து வருவது அதீத முரண்பாடு.

RTE act அடிப்படையில் 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் அல்லது பதவி உயர்வு அனைத்திற்கும் TET அவசியம். 23/8/10 க்குப் பிறகு
Non teaching லிருந்து teaching பதவி உயர்வு பெற  இடைநிலை ஆசிரியர் என்றால் TET PAPER 1 ம், பட்டதாரி ஆசிரியர் என்றால் TET PAPER 2 ம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் பதவிஉயர்வுகள் நடைபெற்று வருகின்றன.

அரசு உதவிபெறும் பள்ளிகளில்,
Teaching- to- Teaching
பதவி உயர்வுகளின் போது நிபந்தனைகள் தளர்வு இருப்பினும், Non- Teaching to Teaching பதவி உயர்வில் TET நிபந்தனைகள் உண்டா? இல்லையா? என்ற தெளிவான அரசாணை இன்றுவரை பிறப்பிக்கப்படவில்லை.


ஆகவே TET பற்றி தெரியாத (23/08/10 - 16/11/12) காலகட்டங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் TET பற்றி தெரிந்த காலகட்டத்தில் பதவி உயர்வு பெற்ற சுமார் 1000 ஆசிரியர்கள்  பணி நியமனங்களிலும் தமிழக அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம் ஒருசில தவறுகள் நேர்ந்துள்ளது.

இதை சரிசெய்யும் பொருட்டு தற்போது ஆசிரியர் பணியில் உள்ள அனைவருக்கும் வரும் காலாண்டு விடுமுறையில் புத்தாக்கப்பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க கொள்கை முடிவினை தமிழக அரசு மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு பெறும். அதுவே சரியான தீர்வாகவும் அமையும். இதை தமிழக அரசு இனியும் காலம் கடத்தாமல் கருணை உள்ளத்தோடு செயல்பட வேண்டும் " என TASTA தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுப்பதாக அதன் மாநில பொருளாளர் திரு. திரவியம் தெரிவித்தார்.

1 comment:

  1. சம்பந்தமே இல்லாத 16.11.2012 என்பது எதற்கான தேதி...2012 மார்ச் மாதம் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் பணி நியமனம ஆணையில் தான் 5 வருடத்தில் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது..அந்த காலகட்டத்தில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தான் நிபந்தனை ஆசிரியர்கள்...23.8.2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரையும் எதற்காக நிபந்தனை ஆசிரியர்கள் என்று கூறுகிறீர்கள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி