பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் முப்பருவ தேர்வு முறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட் டையன்விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர், சென்னை ஆழ்வார்ப்பேட் டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம்கூறி யதாவது:ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் வகை யில் தமிழகபள்ளிக் கல்வித்துறையில்பல்வேறு மாற் றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கிடையே இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின்கீழ் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு கள் நடத்தப்பட உள்ளன. எனினும், மாணவர்கள் நலன் கருதி முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் விதி விலக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார் கள்.
இதுதவிர, பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு பள்ளிக்கு அருகே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையில் தற்போதுள்ள முப்ப ருவ தேர்வுமுறையை ரத்து செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரி களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும்இந்த மாத இறுதிக் குள் கணினிமயமாக்கப்படும் என்றார் அவர்.
Trisemester method Amma kondu vanthathu
ReplyDeleteAdhai neekinal ammavin aanma santhi adaiyadhu
By Mahalakshmi teacher from Thirupoondi North Nagai