பள்ளி கட்டடங்கள் ஆய்வு குழு அமைக்கஉத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2019

பள்ளி கட்டடங்கள் ஆய்வு குழு அமைக்கஉத்தரவு


'அரசு பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை குறித்துஆராய, குழு ஏற்படுத்த வேண்டும்' என, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.

நீலகிரி மாவட்டம், மேலுார் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதியில் உள்ள, அரசு பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.இந்த கட்டடம், 60 ஆண்டுகள் பழமையானதால், இடிந்து விழுந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம்,வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆணைய தலைவர் மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு:

மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில், பழமையான பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராய, பொறியாளர்கள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும். அந்த குழு, பள்ளி கட்டடங்களின் நிலையை ஆய்வு செய்து தரும் அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இடிந்து விழுந்த பள்ளி கட்டடம் தொடர்பாக, பள்ளி கல்வி துறை இயக்குனர், நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி