எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2019

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்?


சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், சேலம், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை, அரியலூர், விருதுநகர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆதி திராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் இந்த பள்ளிகளில் கடந்த 2018-2019-ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்து இருந்தது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்கம் தர 19 மாவட்டங்களில் செயல்படும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அந்த உத்தரவில், அனைத்து தலைமை ஆசிரியர்களும் வருகிற 7-ந்தேதி சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விளக்கம் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் முரளிதரன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Students discipline iillma irukurathu
    Social media pathu ketu ponathu......
    Idhan reason
    By Mahalakshmi teacher nagapattinam

    ReplyDelete
  2. முட்டாள்தனமான உத்தரவு

    ReplyDelete
  3. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி