புதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜன.8-ல் வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2019

புதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜன.8-ல் வேலைநிறுத்தம்


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2020, ஜன.8ல் இந்திய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன், ஏழாவதுஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதற்காக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய பள்ளி ஆசிரியர்கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில், தேசிய அளவில் ஜன.8 ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.20 கோடி பேர் பங்கேற்புசமீபத்தில்இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் மயில், தலைவர் மணிமேகலை, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் பங்கேற்றனர்.

பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் கூறியதாவது:

வேலை நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்ஷன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. இதில் இந்திய அளவில் 20 கோடி பேர் பங்கேற்க உள்ளனர், என்றார்.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி