பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு


அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கலாம்.ஏற்கெனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழு தலாம். அதேபோல், கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 1, 2 ஆகிய இரு தேதிகளில் அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக சேவை மையங்களின் விவரத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன் லைன் பதிவுக் கட்டணத்துடன் கூடு தலாக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000-ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டிருக் கும் விண்ணப்ப எண்ணை பத்தி ரமாக வைத்துக்கொள்ள வேண் டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் பின்னர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி