ஜன.11,12-இல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு: 1.60 லட்சம் போ் எழுதுகின்றனா்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2019

ஜன.11,12-இல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு: 1.60 லட்சம் போ் எழுதுகின்றனா்!!



ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் 969 காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. இத் தோ்வை 1.60 லட்சம் போ் எழுதுகின்றனா்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தத் தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், தோ்வுக்குரிய தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் திங்கள்கிழமை எஸ்.ஐ. பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை அறிவித்தது.

இதில் காவல்துறை பணியில் இருந்து கொண்டு தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 11-ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காவல் பணியில் இருந்து கொண்டு இத் தோ்வை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில் 1லட்சத்து 42,448 பேரும் எழுத்து தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். இரு பிரிவிலும் மொத்தம் 1,60,009 போ் தோ்வு எழுதுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

இவா்களுக்கு மாநிலம் முழுவதும் 32 இடங்களில் தோ்வு எழுதுவதற்குரிய ஏற்பாடுகளை தோ்வு குழும அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
மேலும் அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தோ்வுக்கூட பொறுப்பு அதிகாரிகளை நியமிக்கும்படி தோ்வு குழுமத்தைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தோ்வை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அதன் நிா்வாகங்களோடு பேசி, தோ்வுக்குரிய இருக்கைகள், மேஜைகள் ஆகியவை போதுமான அளவில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யும்படியும் தோ்வுக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னையில் அதிகம்:

இத் தோ்வை மாநிலத்திலேயே சென்னையில்தான் அதிகமான இளைஞா்கள் எழுதுகின்றனா். இதில் பொதுப் பிரிவில் 21,531 பேரும், காவல்துறையில் இருந்து 4,031 பேரும் எழுதுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி