BIOMETRIC- வருகைப்பதிவு நேரம்(BIOMETRIC WARNING) குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2019

BIOMETRIC- வருகைப்பதிவு நேரம்(BIOMETRIC WARNING) குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

வருகைப்பதிவேடு முறைமை சார்பாக கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை
பின்பற்றுமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை தரும் நேரங்களான காலை 9 மணி வரை பச்சை நிறம், 9 மணி முதல் 9.15 மணி வரை - மஞ்சள் நிறம் மற்றும் 9.15 மணி முதல் 9.30 மணி வரை - சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவி பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2. ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1/2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்பட வேண்டும்.

3. பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் காலை 10.00 மணியளவில் பணிக்கு வருபவராயின் காலை 10.00 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும் தொட்டுணர் கருவியில்
பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

4, சிறப்பு வகுப்பு மேற்கொள்ளும் ஆசிரியர்கள் காலை ஒரு மணி நேரம் முன்னதாகவும், மாலையில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் தொட்டுணர் கருவியில் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.


3 comments:

  1. இது வரை வருகை பதிவு குறித்து எந்த விதமான உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை. மாவட்ட கல்வி அலுவலர் தன்னிச்சையாக பிறப்பித்துள்ளார். இது அந்த கல்வி மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். எனவே மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் இதைக்கண்டு எந்தவிதமான கலக்கமடைய தேவையில்லை. இதுவரை நிறங்கள் குறித்து எந்தவிதமான தகவலும் அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி இயங்கும் சூழ்நிலை அந்தந்த பள்ளிகளின் அமைவிடத்தை பொருத்து மாறுபடும்.

    ReplyDelete
  2. அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்தினால் நல்லது.

    ReplyDelete
  3. இதை நான் வரவேற்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி