அனைத்து பள்ளிகளிலும் 25.01.2020 ( சனிக்கிழமை ) தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2020

அனைத்து பள்ளிகளிலும் 25.01.2020 ( சனிக்கிழமை ) தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்!

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி 25.1.2020

25.01.2020 அன்று 10வது தேசிய வாக்காளர் தினம் சேலம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது . இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதிமொழியை வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை 25.1.2020 அன்று காலை 11 . 00 மணியளவில் பள்ளி மாணவ மாணவர்களைக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

வாக்காளர் உறுதிமொழி 

ஜன நாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் , நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் , சுதந்திரமான , நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் , மேலும் , ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் , மதம் , இனம் , சாதி , வகுப்பு , மொழி , ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டு தலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி