நீட்' தேர்வில் மதிப்பெண் சலுகை உள்ளதால், அதிகமானோர் பங்கேற்கும்படி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர,தேசிய அளவிலான நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவர்களுக்கான நீட் தேர்வு, மே, 3ல் நடக்கிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிசம்பர், 2ல் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், டிசம்பர், 31ல் முடிய இருந்த நிலையில், ஜனவரி, 6 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் தொடர்பான சட்டத்தின்படி, அவர்களுக்கு உயர்கல்வியில், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதன்படி, மருத்துவ படிப்பில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் சேரும் வகையில், அவர்களுக்கு, நீட் தேர்வு மதிப்பெண்ணிலும் சலுகை வழங்கப்படுகிறது.
இச்சலுகையை மாணவர்கள் பலர் பயன்படுத்தாததால், 5 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே, மருத்துவ படிப்பில் சேர்வதாக, மருத்துவ கல்வி இயக்குனரக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, அவர்களுக்கான சலுகைகளை தெரிவித்து, நீட் தேர்வில் அதிகம் பங்கேற்க, தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி