மத்திய இடைநிலை கல்வி வாரிய பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

மத்திய இடைநிலை கல்வி வாரிய பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கம்.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்கஉள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வழக்கமாக மார்ச்சில் துவங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே, இன்று துவங்க உள்ளது.நாடு முழுவதும், 5,000 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், மூன்றாம் பாலினத்தவர் ஆறு பேர்,5.22 லட்சம் மாணவியர் உட்பட, 12 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டை விட, 80 ஆயிரம் மாணவர்கள்குறைவாகவே பங்கேற்கின்றனர்.

முதற்கட்டமாக, இன்று முதல், விருப்ப பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வரும், 28 முதல், முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும். எவ்வித முறைகேடும் இல்லாமல் தேர்வை நடத்த, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, சி.பி.எஸ்.இ., நிர்வாகம்மேற்கொண்டுள்ளது. தேர்வுக்கு, பள்ளி சீருடை அணிந்து வரும்படி, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி