தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் - CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2020

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் - CEO செயல்முறைகள்!


திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2019 - 2020ஆம் ஆண்டு தலைப்பின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் , மராமத்துப் பணிகள் , ஆண்கள் கழிப்பறை , பெண்கள் கழிப்பறை மற்றும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இவற்றுள் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்தல் பணிகள் நீங்கலாக பிற பணிகள் நடைபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் 21 . 02 . 2020 ( வெள்ளி ) அன்று முற்பகல் 10 . 00 மணிக்கு திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது .

இக்கூட்டத்தில் இணைப்பில் குறித்துள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களை தவறாது கலந்து கொள்ளச் செய்யும்படி சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி