ஆசிரியர்களுக்கு இயக்குநர் அறிவுரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2020

ஆசிரியர்களுக்கு இயக்குநர் அறிவுரை!


மாணவர்களுக்கான கல்வி திட்ட பணி களை , வீட்டில் இருந்தே ஆசிரியர்கள் மேற் கொள்ளலாம் ' என , பள்ளி கல்வி இயக்குநர் , கண்ணப்பன் கூறியுள்ளார் . இது குறித்து , மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்களுக்கு , அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை :

இந்த இக்கட்டான காலகட்டத்தில் , வீட்டில் ஆசிரியர்களும் , கல்வி துறை பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . வீட்டில் இருக் கும் போது , கல்வி சம்பந்தப்பட்ட பணிகளை யும் , பாடத்திட்டம் குறித்த முன்னேற்பாடுகளை யும் மேற்கொள்ளலாம் .

வரும் கல்வி ஆண்டில் , கற்றல் , கற்பித்தல் தொடர்பான திட்டங்கள் வகுக்கலாம் . மாணவ - மாணவியருக்கு பிடித்தமான நடனம் , ஓவியம் வரைதல் , பராம்பரிய உணவு சமைத்தல் , வண் ணம் தீட்டுதல் , நாடகம் போன்றவற்றுக்கான கருத்துகளை உருவாக்கலாம் . அரசின் உத்தரவுப் படி , அடுத்த கட்ட பணிகள் குறித்த அறிவிப்பு கள் , உரிய நேரத்தில் வழங்கப்படும் . இவ்வாறு , அவர் கூறியுள்ளார் .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி