தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவை மீறி தேர்வு பணி: ஆசிரியர் சங்கம் புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2020

தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவை மீறி தேர்வு பணி: ஆசிரியர் சங்கம் புகார்


''தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவை மீறி பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளர் பணிக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: இன்று பிளஸ் 2 பொதுதேர்வு தொடங்குகிறது.

பிளஸ் 2, பிளஸ் 1, 10 ம் வகுப்பு அரசு பொதுதேர்வுகள் இந்தமாதம் முழுவதும் நடக்க உள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். இதனால் தேர்வு பணியில் இருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். உத்தரவையும் மீறி பெரும்பாலான மாவட்டங்களில் பிளஸ் 2 அரசு பொதுதேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் இடைநிலை ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.

இதனால், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் பணி பாதிக்கும். எனவே, தேர்வு பணிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும், என்றார்.

1 comment:

  1. IFHRMS vilaivugal
    march2020il
    theriyum....
    😁😁😁😁

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி