1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும். மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2020

1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும். மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் , கொரானா தீநுண்மி பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும் , அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்களுக்குத் தேர்ச்சி வழங்க அறிவுறுத்தியும் , மேலும் பல வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து , அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டிடல் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர்நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் , பள்ளிகளை மீண்டும் திறந்ததும் , ஏற்கனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்கப்படும் என்றும் சில தனியார் பள்ளிகளால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் தெரியவருகிறது.

அரசால் அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்புமுதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி சில மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்கள் அவ்வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வுவைத்து அதனடிப்படையில் தேர்ச்சி வழங்குவது என்பது அரசின் ஆணையினை மீறிய செயலாகும். இதுவிவரம் மிகக் கடுமையாக நோக்கப்படும் என்றும் , விதிகளின்படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் அதன் விவரத்தினை ஒரு வாரகாலத்திற்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்கவும் தெரிவிக்கலாகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி