இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, ஜூன், 22ல் துவங்க, தமிழக அரசு திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2020

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, ஜூன், 22ல் துவங்க, தமிழக அரசு திட்டம்.


தமிழக உயர் கல்வித்துறை சார்பிலான, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, ஜூன், 22ல் துவங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான தொழில்நுட்ப பணிகள் துவங்கியுள்ளன.பிளஸ் 2 முடிக்கும் மாணவ - மாணவியர், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பட்டப்படிப்பில் சேருவதற்கு, தமிழக அரசின், ஒற்றை சாளர ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.தமிழக உயர்கல்வித்துறை சார்பில், அண்ணா பல்கலை வழியே, பல ஆண்டுகளாக கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது.

2019 முதல், தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை வழியாக நடத்தப்படுகிறது.ஆன்லைனிலேயே விண்ணப்பித்து, ஆன்லைனிலேயே மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, இடங்கள் ஒதுக்கப்படும்.இதில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்.ஒவ்ேவார் ஆண்டும், ஜூலையில் கவுன்சிலிங் நடத்தி, ஆகஸ்டில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும்.

இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பிரச்னையால், மாணவர் சேர்க்கையை ஒரு மாதம்தள்ளி வைத்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கான, இன்ஜினியரிங் சேர்க்கை கவுன்சிலிங், ஆகஸ்டில் நடக்கிறது. அதற்கு முன், ஜூன், 22 முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகளை துவங்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகளை, தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குனரகம் துவங்கியுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப பதிவுக்கான இணையதளம் உருவாக்குதல், மாவட்டங்களில் கவுன்சிலிங் உதவி மையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் துவங்கியுள்ளதாக, உயர்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி