May 12, 2020
10ஆம் வகுப்பு மாணவியின் தாய் முதல்வருக்கு எழுதிய திறந்த மடல்.
பத்தாம் வகுப்பு மாணவியின் தாய் முதல்வருக்கு எழுதிய திறந்த மடல்
பெறுநர் :
1. தமிழக முதல்வர் அவர்கள் ,
2 . தமிழக துணை முதல்வர் அவர்கள்,
3. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள்.
அனுப்புநர் :
பத்தாம் வகுப்பு மாணவியின் தாய்.
பொருள் : கொஞ்சம் எங்கள் மனவலியை புரிந்துகொள்ளுங்கள்.
ஐயா ,
நான் நன்கு படித்த தாயாய் இருப்பதால் என்னுடைய மகள் இந்த கல்வியாண்டில் 2019 -2020 பத்தாம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கும் போது சராசரி தாயாய் இருந்து விடக்கூடாது என்று தீர்மானித்து இருந்தேன்.
1. புதிய பாடத்திட்டம்,
2.ஆங்கிலம் முதல் தாள் இரண்டாம் தாள் என்று தனி தனியாய் கிடையாது ஒரே பரிச்சையாய் நூறு மதிப்பெண்ணிற்கு இருக்கும்.
3. கூடுதல் வகுப்பு வைக்கக் கூடாது.
4. கேள்வித்தாள் குறித்த தெளிவற்ற அறிக்கைகள்.
5. எந்த விதத்திலும் புரிந்துகொள்ள முடியாத வரலாறு பாட புத்தகச்சொற்கள்.
இப்படி வருடம் முழுவதும் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக் கும் , பெற்றோருக்கும் நீங்கள் கொடுத்த குழப்பங்களும், மன உளைச்சலிற்கும் அளவே கிடையாது. இருந்தும் நாங்கள் எல்லாவற்றையும் மௌனமாய் ஏற்றுக் கொண்டோம். காரணம் எங்கள் பிள்ளையின் பத்தாம் வகுப்பு தேர்வு மட்டுமே எங்கள் கவனமாய் இருந்தது.
இப்போதும் உலகம் முழுவதும் கொரோனா கொள்ளை நோய் பிடியில் இருக்க நீங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வின்றி அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்படுவர் என்று அறிவித்து விடுமுறை கொடுத்து பிள்ளைகளை பத்திரமாய் வீட்டில் பாதுகாப்பாய் இருக்க வைத்தீர்கள். அதற்கு நன்றி! நல்லது !
ஆனால் மூன்றாம் திருப்புதல் தேர்வு எழுதி கொண்டு இருந்த பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு திடீர் என்று தடை பட்ட தேர்வு என்பது முடிவை நெருங்கும் ஓட்டப்பந்தய வீரனின் கண்களுக்கு திடீர் என்று இலக்கு மறைக்கப் பட்டது போன்று ஆகிவிட்டது. இனி அந்த வீரன் ஓடவேண்டுமா? அல்லது நிற்க வேண்டுமா? இதான் எங்கள் பிள்ளைகளின் நிலைமையும் கூட. நாடே, உலகமே முடங்கி கிடக்கும் இந்த நாளில் பத்தாம் வகுப்பு பிள்ளைகள் மட்டும் எப்படி படித்துக்கொண்டு மட்டுமே இருப்பர்? ஆன்லைன் வகுப்புகள் எல்லாம் எல்லா பிள்ளைகளுக்கும் கிடைப்பது எப்படிச் சாத்தியம்? பலமுறை பத்தாம் வகுப்பில் மார்க்ஷீட் அவசியம் அதனால் தேர்வு அவசியம் என்று மட்டும் பேசுகிறீர்கள். ஏன் ? கொள்ளைநோய் காலத்தில் தேர்வின்றி கொடுக்கப்பட்ட சான்றிதழ் என்ற ஒன்றை நீங்கள் பிள்ளைகளுக்கு மாற்றாக வழங்கக் கூடாது? ஒருவேளை அவசியம் இருக்கும் எனில் விரும்பிய பாடம் படிக்க அந்த அந்த கல்வி ஒரு நுழைவு தேர்வு வைத்துகொள்ளுங்கள் என்று ஒரு சலுகை கொடுக்கலாமே? சரி அப்படி கட்டாயம் தேர்வு வைத்தே தீர்வது என்று நீங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் தயவு செய்து பத்து நாளைக்கு ஒரு முறை தேர்வு இப்போது இருக்கும், அப்போது இருக்கும் என்று அறிக்கை கொடுப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்.
நீங்கள் கொரோனாவில் சாவும் மனிதர்களின் உயிரை கவனியுங்கள், குடும்பங்களில் இருக்கும் வறுமையை முற்றும் நீக்க வழிவகையை நடைமுறை படுத்துங்கள். பிள்ளைகள் தைரியமாய் வெளியில் வரலாம் கொரோன நோய் தொற்று இனி இருக்காது என்ற நிலையை உருவாக்குங்கள். அதற்கு பிறகு நாங்கள் எங்கள்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் சகஜ நிலை வந்த பிறகு ஒரு மூன்று வாரம் பாடங்களை திருப்புதலுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அதற்கு பிறகு தேர்வு வையுங்கள்.
தயவு செய்து மே கடைசி வாரம் , ஜூன் முதல் வாரம். ஜூலை கடைசி வாரம் பத்தாம் வகுப்பு போது தேர்வு இருக்கும் என்ற அறிவிப்புகளை சொல்லி சொல்லி எங்களை மனஉளைச்சலுக்கு ஆட்படுத்தாதீர்கள் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு எங்கள் பிள்ளையின் உயிர் முக்கியம், அவர்கள் மனஆரோக்கியம் அதை விட முக்கியம். பத்தாம் வகுப்பு தேர்வு எல்லாம் அதற்கு பிறகு தான் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள ,
பத்தாம் வகுப்பு மாணவியின் தாய் .
K.A.Padmaja
11 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பதிவு.
ReplyDeleteகுழந்தைகளை தயவுசெய்து மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்...
மே அல்லது ஜூன் மாதம் பாடம் நடத்தி ஜூன் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடத்தலாம்
ReplyDeleteபள்ளிக்கல்வித்துறையின் அவல நிலையை தோல் உரித்துக்காட்டும் அற்புதமான கடிதம்...
ReplyDeletesuper madam
ReplyDeleteidhukku enna badhil solrangannu parpom
ReplyDeleteகல்வி பற்றி எவ்வித அறிவும் இல்லாதவர்கள் அதிகாரத்தில் இருந்தால் இப்படித்தான் அறிக்கைகள் அதிரடி என்ற பெயரில் அடிமுட்டாள்தனமானவைகளாக இருக்கும்.
ReplyDeleteஇனி எல்லா தனியார் பள்ளிகளிலும் மாணவர்களை டே ஷிப்ட் நைட் ஷிப்ட் என வரவழைத்து உயிரை எடுக்கப் போகிறார்கள். இது குறித்து நேரில் ஆய்வு செய்ய ஒரு அதிகாரியும் செல்ல ப் போவதில்லை. ஏனெனில் அரசாங்கத்தில் இருக்கும கல்வி சார்ந்த எல்லா அதிகாரியுமே தனியார் பள்ளிகளில் பார்ட்னர்களாக இருக்கிறார்கள். அதனால்தால் எல்லாருமே திருடனுக்கு தேள் கொட்டியது போல கம்மென்று இருக்கிறார்கள்.
ReplyDeleteமிக மிக தவறான முடிவு...மாணவர்களுக்கு திருப்புதல் செய்வது எப்போது?...எவ்வாறு..?..
ReplyDeleteதொற்று மிக மிக குறைவாக உள்ள கேராளா,கர்நாடகா போன்ற மாநிலங்களே இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும் போது நம் தமிழ்நாடு மட்டும் ஏன் இப்படி?..ஆளத் தகுதியற்ற சுயநலவாதிகள் ஆட்சி செய்வதால் மட்டுமே இந்த அவலம்..
மாணவர்களின் உயிரோடும், பெற்றோர்களின் உளவியலோடும்,
ReplyDeleteஆசிரியர்களின் பரிதவிப்போடும் விளையாடுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்...
மேடம் நீங்கள் சொல்லுவது சரிதான் நல்ல ஓர் கடிதம்
ReplyDeleteஇந்த மாணவியின் தாயார் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா கிடைக்காதா என்பது நமக்கு தெரியாது ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனமான உண்மை மனித உயிர்களோடும் மாணவர்களின் வாழ்க்கையோடும் விளையாடும் இந்த அரசு கல்வித்துறையில் கொண்டுவந்த ஒவ்வொரு மாற்றங்களும் தெளிவில்லாத நீரோடை போன்றது அதுமட்டுமின்றி எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக கூறாமல் மாற்றி மாற்றி கூறுவதால் பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் மூவருமே பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் ஆனால் அதைப் பற்றி இந்த அரசு கவலைப்படுவதே இல்லை இப்பொழுது நாடிருக்கும் நிலையில் இந்த தேர்வு இவ்வளவு விரைவில் நடத்தப் படவேண்டியது தேவைதானா ஏன் என்றால் கரோனா தொற்று குறைவாக உள்ள கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களே தேர்வு பற்றி எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை ஆனால் நமது நிலையான முடிவை எடுக்க தெரியாத அரசு மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறது என்று தெரியவில்லை ஆகவே இதற்கு தீர்வு நீதிமன்றம் மூலம் தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது . இந்த மாணவியின் கடிதத்திற்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் இந்த தேர்வு நிலைக்கும் நீதி கிடைக்குமா
ReplyDelete