10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2020

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்!


தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனையடுத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தலா ஒரு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.அதனையடுத்து, மார்ச் 27 ல் துவங்கி ஏப்., 13ம் தேதி வரை நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வும் முழுமையாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 ஒரு பாடத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த 9ம் தேதி அறிவித்தார்.
மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவித்தார். இதனையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிக்க, வருகை பதிவேட்டை, கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் வருகைப் பதிவை, மார்ச் 21 வரை முழுமையாக உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அந்த வருகைப்பதிவேட்டை, ஒவ்வொரு பிரிவு வாரியாக காட்டி, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை, மாவட்ட கல்வி அலுவலகத்தில், கிருமிநாசினி தெளித்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன.

இதில், 439 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. அதில், 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் என 35,546 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். இந்நிலையில், கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் கல்வி மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, பள்ளி நிர்வாகங்கள் நேற்று ஒப்படைத்தன. இதனையடுத்து, மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

2 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் நிரந்தரம் என்று கேட்கும்போதெல்லாம் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்றீங்களே? பணியிடங்களையெல்லாம் போனவருசம் குறைத்தார்களே அப்போது ஏதாவது பேசினீர்களா? போராட்டம் செய்தீர்களா? அப்போதும் ஆசிரியர் சங்கங்கள் படித்துவிட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குரல் கொடுத்தார்கள். படித்துவி்ட்டு டெட் தேர்ச்சி பெற்றுவி்ட்டெல்லாம் (2013 - காலாவதி விரைவில்) இருக்கும் நீங்கள் அதைப்பற்றி சிந்தித்தீர்களா? அனைத்துத் துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்து படித்தவர்களின் கனவுகள் கலைந்து போகும் நிலையை உருவாக்கியுள்ளார்களே அப்போது குரல் கொடுக்காத நீங்கள் பகுதி நேர ஆசிரியர் என்ற ஒரு வயிற்றிலடிக்கும் ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி அரைநாள் மட்டும் வேலை, வாரத்தில் அதுவும் 3 நாள் என்று வேறு வழியில்லாமல் பல்வேறு வயதானவர்கள் இதில் தற்போது ஓய்வும் பெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்தும் 7700 தான் சம்பளம் பெற்று வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே குடும்பம் உண்டு தானே என்று நினைத்துப் பார்க்காத அரசை கேட்கும் போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள். உங்களுக்கானதை முதலில் கேட்கத் தயாராகுங்கள். 2013-ல் கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் மக்கள் இன்னும் சில நாட்களில் காலாவதியாகும் சான்றிதழை வைத்துள்ளார்கள். சிந்தியுங்கள்.

    ReplyDelete
  2. 2013 candidates பாவம் மார்க் wise போடலாம் அனைத்து போட்டித் தேர்வு மதிப்பெண் மட்டும் வைத்து வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி