அரசு தேர்வு துறைக்கு புதிய இயக்குநர் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2020

அரசு தேர்வு துறைக்கு புதிய இயக்குநர் நியமனம்


பள்ளி கல்வி துறையின் அங்கமான, அரசு தேர்வு துறைக்கு, புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்ததுறையின் இயக்குநராக இருந்த உஷாராணி, 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனித்து வந்தார்.அவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இதையடுத்து, அரசு தேர்வு துறையின் புதிய இயக்குநராக, பழனி சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவு:அரசு தேர்வு துறை இயக்குநராக பணியாற்றும் உஷாராணி, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜூன், 9 முதல், ஜூலை, 7 வரை, மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.எனவே, அரசு தேர்வு துறையின் பணிகளை கவனிக்கும் வகையில், நிர்வாக நலன் கருதி, புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடக்க கல்வி இயக்குநராக பணியாற்றும் பழனிசாமி, அரசு தேர்வு துறை இயக்குநர் பொறுப்பை, முழு நேர கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி