எஸ்.ஐ., பணியிடங்களுக்கான, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, திருச்சியில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறையில் காலியாக உள்ள, 969 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப,2019 மார்ச்சில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பணிக்கு, காவல் துறையில் பணிபுரியும், இரண்டாம் நிலை; முதல் நிலை; தலைமை காவலர்கள் என, 17 ஆயிரத்து, 561 பேர், பொதுப்பிரிவில், ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 448 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கு, ஜனவரி, 12, 13ம் தேதிகளில், 32 மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மார்ச்சில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற, 5,275 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டி தேர்வுகள் நடத்தி, இறுதி முடிவு அறிவித்து இருக்க வேண்டும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அந்தப் பணிகள் நடைபெறாமல் இருந்தன.
இந்நிலையில், உடல் கூறு அளத்தல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகளை, திருச்சியில் நடத்தும்படி, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.இதற்கான சுற்றறிக்கையை, மத்திய மண்டல ஐ.ஜி.,க்கு, அவர் நேற்று அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி