SSLC - காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது? அமைச்சர் பதில். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2020

SSLC - காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது? அமைச்சர் பதில்.


''எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வர் தேர்ச்சி குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:எஸ்.எஸ்.எல்.சி., மாணவ - மாணவியரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் தலா, 40 சதவீதம், வருகை பதிவேடு அடிப்படையில், 20 சதவீதம் என, கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும்.அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து பரிசீலிப்போம்.

தனித் தேர்வர்களுக்கு, எந்த முறையில் தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து, அரசு பரிசீலனை செய்யும். இது பற்றி, முதல்வர் தலைமையில் ஆலோசனை செய்து, முடிவு எடுக்கப்படும்.நுாலகங்களை திறப்பது குறித்து, அரசு அறிவிக்கும். அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து செல்லும்போது, தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் பாடத் திட்டத்தை குறைப்பது குறித்து, 16 பேர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கோவில் திறப்பது குறித்த அரசின் முடிவை, அமைச்சர் ஜெயகுமார் தெரிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

26 comments:

  1. முதலில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற சிறப்பான பணியை இவர்கள் தான் உருவாக்கினார்கள. இப்போது இவர்களை வஞ்சித்து வறுமை நிலைக்குத் தள்ளி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குவதும் இவர்களே. வாரத்தில் மூன்று அரை நாட்கள் போக மற்ற நாட்களில் எங்கு சென்று வேலை பார்க்க முடியும்? இந்த கொரோனா பொது முடக்கத்தின் போது மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இந்த ஆட்சியாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த வருடமாவது சம்பளம் வழங்கத் தயாராக இல்லை என்ற நிலையில் என்ன சொல்வது? தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளும் பி.எட் படித்தவர்களுக்கு கிடைக்காத நிலை சென்ற ஆண்டு பணிநியமன நடவடிக்கைகளுக்குப் பதிலாக பணியிடங்கள் குறைப்பு என்ற நிலையை இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். அதிலும் தற்போது கொரோனா என்ற அரக்கனைக் காண்பித்து வேறு நியமனங்களும் இல்லை என்ற நிலையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படித்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலை பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டில் இருப்பது..... எனவே ஏதோ கால்வயிறு கஞ்சிக்காக வாடும் இவர்களின் கோரிக்கையை கருணையுள்ளத்தோடு பார்த்தால் நல்ல வாழ்க்கையை அளிக்க முடியும். செய்வார்களா?

    ReplyDelete
    Replies
    1. First spelling ah correct ah podu aparam aduthavana kindal panalam beggars ku spelling therijitu pesu da loose

      Delete
  2. naanum 10th dhan confirm public exam irundhrukkanum exam irun dhirundha adhiga mark eduthuruppom

    ReplyDelete
  3. நான் அரசு உதவி பெறும் பள்ளியில் PTA வேலை வில் செய்கிறேன் எங்கள் பள்ளியில் இந்த மாதம் முதல் பள்ளி திறக்கும் வரை சம்பளம் வழங்க முடியாது என்று கூறினார் சம்பளம் 5000 தான் ஆனால் நிரந்தர ஆசிரியர் களுக்கு மட்டும் அரசாங்கம் சம்பளம் வழங்க வேண்டும் அவர்களை மாதிரி தான் நாங்களும் உழைக்கிறோம் என்ன வித்தியாசம் அவர்கள் online attance. போட்ராங்க நாங்கள் அதற்கு நிகரான பதிவேட்டில் போடுகிறோம் பணி அனைவருக்கும் ஒன்று தான் சம்பளம் தான் வேறு அப்படி இருக்க எங்களுக்கு சம்பளம் மறுக்க படுகிறது இதற்க்கு யாராவது முயற்சி செய்து ஒரே வேலை ஒரே ஊதியம் என்பதற்கு வழிசெய்யும் நிரந்தர பணியாளரை விட தற்காலிக பணியாளரின் வேலை அதிகமாக வாங்கபடுகிறது

    ReplyDelete
    Replies
    1. Antha velaiku yeen pona. Government exam eluthi permanent job ku poi irukalame

      Delete
    2. நண்பரே... .

      இது போன்ற வலைதளங்களை பார்த்து நேரத்தை வீணாக்காமல் அந்த நேரத்தில் நன்றாக படித்து கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். நான் அப்படி முயற்சி செய்து தான் தேர்வில் வெற்றி பெற்று பணியில் இருக்கிறேன்.

      வாழ்த்துகள்....

      Delete
    3. நானும் அரசு உதவிபெறும் பள்ளியில் தான் வேலை பார்க்கிறேன். எங்கள் மேலாண்மை சம்பளத்துடன் எங்கள் pf

      Delete
    4. சேர்த்துதான் கொடுத்தார்கள்

      Delete
    5. Idha soldrdhuku vandhudura ga...

      Delete
  4. இது கொளரவ பேராசிரியர்களுக்கும் பொருந்தும். சிறிதும் நேர்மையில்லாத திறமையற்ற தகுதியற்ற சுயநல ஆட்சியாளர்கள்.

    ReplyDelete
    Replies
    1. புலம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை.

      இந்த சுயநல உலகத்தில் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியம்

      Delete
  5. மனசாட்சியற்ற அரசு , அமைச்சர் , கல்வி துறை அதிகாரிகள் இருக்கும் வரை பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வும் பி. எட் படித்தவர்களின் வாழ்வும் 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வும் கேள்விக்குறிதான்.

    ReplyDelete
  6. TET2013 கூட்டமைப்பு ஏதாவது முயற்சி பண்ணுங்க please.

    ReplyDelete
  7. TET2013 கூட்டமைப்பு ஏதாவது முயற்சி பண்ணுங்க please.

    ReplyDelete
  8. பகுதி நேரப்பணிக்கு நீங்கள் செல்லாமல் இருந்திருந்நதால் இந்நேரம் தேர்வு வைத்து நிரந்தர பணியாக மாற்றி இருப்பார்கள். குறுக்குவழியில் இரண்டு லட்சம் கொடுத்து 90% பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர்.
    அதன் விளைவை இன்று அனுபவிக்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. மற்றவரின் வாய்ப்பை தட்டி பறித்தவர்கள் நீங்கள்😢😢😢😢😢😢😢😢

      Delete
    2. Idhula qualification illadha persons dha amount kuduthu ponadhu ipo yarum avagala illa idhula Iruka yelarum qualified.then ye part time poniga poniga nu kekara negalam ye teachers poratam panapa 3 month ku 10000 salary ku apply paniga. temporary nu theriji irudhalum paravala nudhana try paniga adhu pola dha nagalum

      Delete
  9. எல்லாரும் சேர்ந்து வேலையை ராஜினாமா செய்யுங்க பின்னர் அரசு ஊதியத்தில் அரசு வேலை கொடுக்கும்

    ReplyDelete
  10. 2013 dont worry innum 1year irukkutu

    ReplyDelete
  11. First 2013 posting fill pannuvanga next 2017

    ReplyDelete
    Replies
    1. Fill by TET mark base(2013, 2017, 2019) or competitive exam

      Delete
  12. Will portion 's for present 10,12 be reduced and when it will be announced....if earlier its announced parents can guide their children ..since it's lockdown...

    ReplyDelete
  13. Ninth standard .....that is previous year Marks can be awarded

    Msg ADVOCATE G Pravina MBBS BL

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி