பள்ளிக்கல்வி - சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2020

பள்ளிக்கல்வி - சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை இரத்து செய்ததினால் ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்யும் வகையில் பள்ளிகளுக்கான இழப்பீட்டுத் தொகை 2008-09ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி , பார்வை 3 - ல் காணும் இவ்வியக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின்படி 2020-2021ஆம் கல்வியாண்டிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே , அனைத்து மாவட்டங்களில் செயல்படும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மதுரை , தேனி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகைக்கான தேவை பட்டியலை 15.09.2020 க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி