கல்வி உதவித்தொகை வழங்காமல் நிலுவை: வங்கி கணக்கை சரிபார்த்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு*_
எஸ்.சி., ~ எஸ்.டி., கல்வி உதவித்தொகை பெறாமல் உள்ள மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*
திராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.*
*இது, மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.*
*சேலம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களில், பலருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.*
*இதையடுத்து, ஆதி திராவிட நலத்துறை அலுவலகம் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:*
*கடந்த, 2018 ~ 19, 2019 ~ 20 கல்வியாண்டில், 9 முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்கு தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, நிலுவையில் உள்ளது.*
*அந்த மாணவர்களின் சரியான வங்கி கணக்கு எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பள்ளி தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.*
*இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி